Thursday, March 12, 2009

Some more impressive Women - Women's Day Special

The one major point told by all the successful women are FAMILY SUPPORT, DEDICATION, HARD WORK.

Might be repititive women in both the programs but I liked the impressive talk which they have said in both the programs.


@ Yahoo! Video





@ Yahoo! Video


Sigaram Thotta Pengal Mar 08 Part 1 @ Yahoo! Video



Sigaram Thotta Pengal Womens Day Special Part 2 @ Yahoo! Video

Women's Day Special Program on Vijay TV

The videos that I found on the net and liked the way the husbands and wives dedicate the success attained within themselves...and the importance of women in their lives...wanted to preserve this video in my collections...



Monday, March 9, 2009

A very nice impressive article from Vikatan magazine

Sorry for the posting after a very long time...I just came across this impressive article today....thought will share keep a copy of this in my diary.

'நான்' என்பது எங்கே இருந்து புறப்படுகிறதோ... அதைக் கவனித்தால், மனம் அங்கே அடங்கும். அதுவே தவம்!

ஒரு மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறும்போது, மந்திர ஒலி எங்கிருந்து புறப்படுகிறது என்பதைக் கவனித்தால், மனம் அங்கே அடங்கும். அதுவே- தவம்!

வெட்டியான் எரிக்கும்போது தசைகள் இழுபட்டு, பிணம் எழும். அப்போது, தடியால் அந்தப் பிணத்தை ஓங்கி அடிப்பான் வெட்டியான். உடல் எரியும் வரை இது தொடர்கிறது. கடைசியில் உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிறது. பிறகு, 'தடிக்கு வேலை இல்லை' என்று வெட்டியான் அதைத் தீயிலேயே போட்டு விடுகிறான். இந்த வெட்டியானைப் போல்தான் நாமும்! 'ஆத்ம விசாரணை' எனும் தீயில் வேகும் பிணம்தான் மனம்! எழ எத்தனிக்கும் பிணத்தை அடிக்கும் 'தடி'யாக 'நான் யார்?' என்ற கேள்வி இருக்கட்டும். இறுதியில் பிணத்துடன் தடியும் எரிந்து முடியும்போது, ஆத்ம தரிசனம் கிடைக்கிறது.

இதை எப்படிச் செய்வது?

பிற எண்ணங்கள் எழுந்தால்... அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு முயலாமல், அவை யாருக்கு உண்டாயின என விசாரிக்க வேண்டும். அப்படி 'நான் யார்' என்று விசாரித்தால், மனம் தன் பிறப்பிடத்துக்குத் திரும்பி வரும்!

ஒவ்வொரு எண்ணமும் எழும்போது, அதைத் தொடரக் கூடாது. மாறாக, 'இந்த எண்ணம் யாருக்கு உண்டாயிற்று?' என்று கேட்க வேண்டும். 'எனக்கு' என்று சொல்லும். அந்த ''நான் யார்?' என்று மீண்டும் கேட்டால், அது எண்ணம் உற்பத்தியான இடத்துக்குக் கொண்டு போய் விடும். அந்த இடத்திலேயே மனமும் ஒடுங்கும். இதுவே உண்மையான 'நான்'.

மனம் சூட்சுமமானது. 'நான்' எனும் நினைவு கொஞ்சமும் இல்லாத இடம் சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். இப்படி சும்மா இருப்பதற்குத்தான், 'ஞான திருஷ்டி' என்று பெயர். சும்மா இருப்பது என்பது, மனதை ஆன்ம ரூபத்தில் லயிக்கச் செய்வது ஆகும். ரமணரின் பார்வையில்... மனத்தை ஆன்ம ரூபத்தில் லயிக்கச் செய்வதே 'ஞான திருஷ்டி!'

எண்ணங்கள் தோன்றத் தோன்ற, அதிகமான சொற்கள் மனதில் தோன்றுகின்றன. இறைவன் பெயரை அல்லது மந்திரத்தை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்ல, வேறு சொற்கள் அல்லது எண்ணங்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. பல எண்ணங்கள் இருந்த இடத்தில் இறைவனின் பெயர் மட்டுமே உச்சரிக்கப்படுவதால், மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

இதற்கு ரமணர் கூறும் உதாரணம் மிகச் சிறந்தது.''சதா அசைந்து கொண்டிருக்கும் ஒரு யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அந்த யானை எப்படி வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக் கொண்டு செல்லுமோ, அவ்வாறே சதா அசைந்து கொண்டிருக்கும் மனமும், அதனை ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்துக்கு பழக்கினால், அதனையே பற்றிக் கொண்டிருக்கும்.''

பகவான் ரமணரை விருபாட்சி குகையில் சந்தித்த எப்.எச். ஹம்பரீஸ் என்பவர், ''ரமணரின் புன்முறுவலை விட, வேறு எதுவும் அழகு மிகுந்திருப்பதாக என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பகவானிடம் அவர் கேட்ட முதல் கேள்வியே ''என்னால் உலகத்துக்கு உதவ முடியுமா?'' என்பதே.

''உனக்கு உதவிக் கொள்; அது உலகத்துக்கும் உதவியாகும்''

பகவான் சொன்னதின் உட்பொருள், 'நீதான் உலகம்- உலகம்தான் நீ' என்பதாகும் (நன்றி: ஒரு மகானின் அவதாரம்- ரமணா).