Thursday, October 16, 2008

இப்படிஇருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!
11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.

I found this post 100% true and hilarious too... :)

Splash on Job

  1. Never make your hobby your job...suddenly, at some point in time, money will seem to matter a lot.
  2. Love your job.. If you don't, find ways to love it.. If not, move on.
  3. All jobs get interesting with nice managers.
  4. The most interesting job can get irritating with a bossy manager.
  5. Aim for and work towards perfection in your job, but remember to forgive yourself of your mistakes at work, because no one else will.
  6. To love your job, compete with your past record in the same job.
  7. To do a thorough job, all you need is the fundamental belief that you can do better than the best.
  8. Take time to appreciate the job you have done... often that improves your performance.

Tuesday, October 7, 2008

Don't be scared of Failures.....

According to me I would never feel offended if I fail the first time because I will always learn how to do the job perfectly when I do it the second time......

Major discoveries have come through only after crossing many steps of failures.....

so don't ever feel depressed if you fail...may be it just sharpens your BOLDNESS to face the world...

100% உண்மை ( இது நான் சொன்னது அல்ல நித்யானந்தர்சுவாமி சொன்னது)

டுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற முடியுமா?

கேள்வியாக இருந்தால் அதற்கான பதில் `முடியும்' என்பதே.

``முடியுமா?!

எப்படி முடியும்?'' என்று வியந்துகேட்டால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.

எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற இந்த மூன்று பலத்தை ஒருவர் பெற்றால் போதும்.

1. ஜனபலம். 2. பணபலம். 3. தெய்வபலம்.

இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற்று விட முடியாது.

பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம், ``இதுவரை நான் ஆராய்ந்து பார்த்ததில், பலரின் எதிரிகள் அவர்களின் நண்பர்களாக இருக்கிறார் கள், இருந்தவர்களாக இருக்கிறார்கள்.

நெருங்கியவரே நெருப் பாகிவிடுகின்றனர். ஏன்?'' என்று கேட்டார்.

அதற்கு ஜென் ஞானி சொன்னார், ``நீங்கள் ஒருவரிடம் உறவாட ஆரம்பித்த முதல் வினாடி யிலிருந்தே இரண்டே இரண்டு நிகழ்வு மட்டும்தான் நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஒன்று நண்பராகலாம். அல்லது எதிரியாகலாம்.

விருப்பத்திற்குரியவராக லாம் அல்லது வெறுப் பிற்குரிய வராகலாம்.ஒவ்வொரு நொடியிலும் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
நம் நண்பர்தானே, என் உறவினர்தானே என்று உரிமை கொண்டு அலட்சியத்தோடு நடந்து கொள்ள ஆரம்பித்தாலே அபாயம் ஆரம்பமாகி விடுகிறது.

எந்த நொடியில் அலட்சிய மாகின்றீர்களோ, அந்த நொடியில் தான் உங்களின் எதிரிகள் உருவாகின்றார்கள். நண்பர்கள் கூட எதிரியாவது அப்போதுதான்.

``அப்படியென்றால் யாரையுமே நம்ப முடியாதா?'' என்று குடும்பஸ்தர் மிக வருத்தத்தோடு கேட்டார்.

ஜென் ஞானி சொன்னார், ``ஞானியாக எல்லோருக்குள்ளும் அகங்காரம் இருந்தே தீரும். அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராயிருக்கும்.

இதைப் புரிந்து, உணர்ந்து, பக்குவத்தோடு கையாண்டால் எதிரியைக் கூட நண்பராக்கிவிட முடியும்'' என்று முடித்தார்.

ஜன பலத்தைச் சேர்ப்பது எப்படி?

மூளையிலேயே வாழ்வதுதான் எதிரிகளை உருவாக்கும். இதயத்தில் இறங்கி வாழ ஆரம்பித்தாலே எதிரிகள் உருவாகுவதை நிறுத்தி விடலாம்.
உங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வு களைக் கண்டுபிடித்து அவர்களின் நல்ல உணர்வுகளை மட்டும் எழுப்பும் உணர்வோடு நீங்கள் பழக ஆரம்பித்தாலே... நீங்கள் மாறுவதற்கு முன் அவர்களே மாறிவிடுவார்கள்.
அன்பு, ஆதரவு, சின்ன பாராட்டு, சிறு புகழ்ச்சி என்பன போன்ற சில உணர்வுகளைப் பெறத்தான் ஒவ்வொரு ஜீவனும் ஏங்குகின்றது. இதைத் தந்துவிட்டால், நீங்கள் தனி நபரல்ல, நீங்கள் ஒரு தனி சாம்ராஜ்யம்!

பண பலத்தை அதிகரிப்பது எப்படி?

குழப்பம், ஏக்கம், ஏமாற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் எதிலும் சிக்காமல் இருக்குமளவுக்கு உங்களை சுதந்திரப்படுத்தி வைத்துவிட்டால் நீங்கள் செல்வந்தர்தான்.

தெய்வபலத்தைச் சேர்ப்பது எப்படி?

தெய்வ பலத்தை மனிதனால் சேர்க்க இயலாது.

ஏனென்றால், அது ஏற்கெனவே நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறது.

ஆற்றுக்குள் நீந்தித் திரியும் மீன் ஆற்றின் குளுமையை அனுபவிக்க அது செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. தான் ஆற்றில் தான் இருக்கின்றோம் என்பதை உணர்ந்தாலே போதும்.

தெய்வ பலத்தை அனுப விக்க ஆழ்ந்த உணர்வோடு தெய்வசக்தியோடும்குரு சக்தியோடும் உங்களை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொள்ளுங்கள்.

மாபெரும் இறைசக்தி யில்தான் நீங்கள் இருக் கின்றீர்கள் என்பதை உணர்வுபூர்வமாகவும், பக்திபூர்வமாகவும் உணர ஆரம்பித்தால்... தெய்வ பலம் உங்களை வழிநடத்துவதையும், வழி காட்டுவதையும் கண்கூடாய் காண்பீர்கள். இது ஒரு மாபெரும் தியானம். செய்து பாருங்கள். பலம் புரியும்.

Wednesday, October 1, 2008

Do you believe on GHOSTS.....there lives a ghost in the Airport

Sounds funny and unbelievable.....isn't it.

Even I did not believe when I heard my friend say....came back home and googled about it....

I am still not able to beleive it. Was scared to sleep at night after hearing and reading about this. Need to be a bit careful while landing there....some people guess it to be the actress Soundarya.

A Ghost in the Bangalore/Bengaluru Airport read more

I feel its just an illusion.....what do you all say?