Tuesday, October 7, 2008

100% உண்மை ( இது நான் சொன்னது அல்ல நித்யானந்தர்சுவாமி சொன்னது)

டுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற முடியுமா?

கேள்வியாக இருந்தால் அதற்கான பதில் `முடியும்' என்பதே.

``முடியுமா?!

எப்படி முடியும்?'' என்று வியந்துகேட்டால் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.

எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற இந்த மூன்று பலத்தை ஒருவர் பெற்றால் போதும்.

1. ஜனபலம். 2. பணபலம். 3. தெய்வபலம்.

இம்மூன்றில் ஒன்று குறைந்தாலும் எடுத்த காரியத்திலெல்லாம் வெற்றி பெற்று விட முடியாது.

பேராசிரியர் ஒருவர் ஜென் ஞானியிடம், ``இதுவரை நான் ஆராய்ந்து பார்த்ததில், பலரின் எதிரிகள் அவர்களின் நண்பர்களாக இருக்கிறார் கள், இருந்தவர்களாக இருக்கிறார்கள்.

நெருங்கியவரே நெருப் பாகிவிடுகின்றனர். ஏன்?'' என்று கேட்டார்.

அதற்கு ஜென் ஞானி சொன்னார், ``நீங்கள் ஒருவரிடம் உறவாட ஆரம்பித்த முதல் வினாடி யிலிருந்தே இரண்டே இரண்டு நிகழ்வு மட்டும்தான் நிகழ வாய்ப்பிருக்கிறது.

ஒன்று நண்பராகலாம். அல்லது எதிரியாகலாம்.

விருப்பத்திற்குரியவராக லாம் அல்லது வெறுப் பிற்குரிய வராகலாம்.ஒவ்வொரு நொடியிலும் எது வேண்டுமானாலும் நிகழலாம்.
நம் நண்பர்தானே, என் உறவினர்தானே என்று உரிமை கொண்டு அலட்சியத்தோடு நடந்து கொள்ள ஆரம்பித்தாலே அபாயம் ஆரம்பமாகி விடுகிறது.

எந்த நொடியில் அலட்சிய மாகின்றீர்களோ, அந்த நொடியில் தான் உங்களின் எதிரிகள் உருவாகின்றார்கள். நண்பர்கள் கூட எதிரியாவது அப்போதுதான்.

``அப்படியென்றால் யாரையுமே நம்ப முடியாதா?'' என்று குடும்பஸ்தர் மிக வருத்தத்தோடு கேட்டார்.

ஜென் ஞானி சொன்னார், ``ஞானியாக எல்லோருக்குள்ளும் அகங்காரம் இருந்தே தீரும். அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராயிருக்கும்.

இதைப் புரிந்து, உணர்ந்து, பக்குவத்தோடு கையாண்டால் எதிரியைக் கூட நண்பராக்கிவிட முடியும்'' என்று முடித்தார்.

ஜன பலத்தைச் சேர்ப்பது எப்படி?

மூளையிலேயே வாழ்வதுதான் எதிரிகளை உருவாக்கும். இதயத்தில் இறங்கி வாழ ஆரம்பித்தாலே எதிரிகள் உருவாகுவதை நிறுத்தி விடலாம்.
உங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வு களைக் கண்டுபிடித்து அவர்களின் நல்ல உணர்வுகளை மட்டும் எழுப்பும் உணர்வோடு நீங்கள் பழக ஆரம்பித்தாலே... நீங்கள் மாறுவதற்கு முன் அவர்களே மாறிவிடுவார்கள்.
அன்பு, ஆதரவு, சின்ன பாராட்டு, சிறு புகழ்ச்சி என்பன போன்ற சில உணர்வுகளைப் பெறத்தான் ஒவ்வொரு ஜீவனும் ஏங்குகின்றது. இதைத் தந்துவிட்டால், நீங்கள் தனி நபரல்ல, நீங்கள் ஒரு தனி சாம்ராஜ்யம்!

பண பலத்தை அதிகரிப்பது எப்படி?

குழப்பம், ஏக்கம், ஏமாற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகள் எதிலும் சிக்காமல் இருக்குமளவுக்கு உங்களை சுதந்திரப்படுத்தி வைத்துவிட்டால் நீங்கள் செல்வந்தர்தான்.

தெய்வபலத்தைச் சேர்ப்பது எப்படி?

தெய்வ பலத்தை மனிதனால் சேர்க்க இயலாது.

ஏனென்றால், அது ஏற்கெனவே நம்மீது பொழிந்து கொண்டிருக்கிறது.

ஆற்றுக்குள் நீந்தித் திரியும் மீன் ஆற்றின் குளுமையை அனுபவிக்க அது செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. தான் ஆற்றில் தான் இருக்கின்றோம் என்பதை உணர்ந்தாலே போதும்.

தெய்வ பலத்தை அனுப விக்க ஆழ்ந்த உணர்வோடு தெய்வசக்தியோடும்குரு சக்தியோடும் உங்களை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொள்ளுங்கள்.

மாபெரும் இறைசக்தி யில்தான் நீங்கள் இருக் கின்றீர்கள் என்பதை உணர்வுபூர்வமாகவும், பக்திபூர்வமாகவும் உணர ஆரம்பித்தால்... தெய்வ பலம் உங்களை வழிநடத்துவதையும், வழி காட்டுவதையும் கண்கூடாய் காண்பீர்கள். இது ஒரு மாபெரும் தியானம். செய்து பாருங்கள். பலம் புரியும்.

No comments: