Tuesday, April 1, 2008

திருவள்ளுவர் பற்றி எழுதும்போது நான் இதில் இருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும் ஆனால் நான் இதை மறந்து விட்டேன். மன்னிக்கணும்!!

(இந்த குறளை நான் எல்லா பாலச்சந்தர் சீரியல் மற்றும் படங்களில் கேட்டு இருக்கிறேன்)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம் : எழுத்துக்கள் "அ" என்னும் எழுத்தை முதலாக க்கொண்டு விளங்கி வருவது போல், இந்த உலகம் இறைவனை முதல் பொருளாகக்கொண்டு வாழ்ந்து வருகிறது.

நேற்று நான் எழுதிய முதல் போஸ்ட் எனக்கே நம்ப முடியாத சந்தோஷத்தை கொடுத்தது. ரொம்ப நாள் கழிச்சு நானே தமிழில் எழுதிய சந்தோஷம். நான் தமிழ் எழுத்து கூட்டி தான் படிப்பேன் அதுலேயும் அதிகமான தவறுகள் இருக்கும். அந்த சந்தோஷத்துல இரண்டு குறள் எழுதவே மறந்துட்டேன். எனக்கு மிகவும் பிடித்த முதல் இரண்டு குறள் :

1. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

விளக்கம் : இந்த நல்லவனைத்தன் மகனாகப்பெற , இவன் தந்தை என்ன புண்ணியம் செய்தாரோ, என்று மற்றவர்கள் ஆச்சர்யமாக பேசும்படி அறிவுடனும் ஒழுக்கமுடனும் நடந்துகொள்வதே தந்தைக்கு மகன் செய்யும் நன்றியாகும்.

This is what it means in English - (So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.

2. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம் : "நல்லவன் அறிவுடையவன் " என்று ஒருவனை மற்றவர்கள் உயர்வாக ப்பேசுவதை அவனுடைய தாய் கேட்டால் அவனைப்பெற்று மகிழ்ந்த அந்த நாளை விட அதிகமாக மகிழ்ச்சி அடைவாள்.

This is what it means in English - The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

Here is a video of a small kid that I came across which cutely says the குறள் when her mother gives her a clue.




There is also a video on Dr.APJ Abdul Kalaam's speech on திருக்குறள்:

No comments: